Wednesday, December 9, 2009

GENERATION OF CELL PHONES

THE CELL PHONE

செங்கல் போல் இருந்த என் அன்பே
உன்னை பைக்குள் அடக்கியது
பிடிக்காது போலும் - நீயே
உன் உடம்பை குறைத்து
எம் கைக்குள் அடங்கினாய்

கண்ணால் பார்த்து கடைசியில்
கைகளால் தீண்டினால் அது காதல்

புரியவில்லையடி உன் காதலை
உன்னை கைகளால் தீண்டினோம் - ஆனால்
இப்போது உன்னை தொட கூட முடியவில்லையடி
என் சைகைக்கே வார்த்தைக்கே பனிகிறாய்
என் வார்த்தையே உனக்கு கீதையா?

பெருமையாய் இருக்குதடி
என் பேச்சையும் கேட்க ஒரு ஜீவன்
இவ்வுலகிலும் உள்ளது என்று எண்ணி..

யார் நீ?

பெண்களிடம்
ஏதாவது ஒன்றாவது இருக்கும்
அழகு இல்லை அறிவு
ரெண்டும் இல்லா - உன்னை
என்ன என்பது?

காதல் அழிவதில்லை

இவனும்
தவறு செய்துவிட்டான் என்று
தனிமை சிறையில் அடைத்துவிட்டோம் என
தலைக்கணமா - வேண்டாமடி

நான் ஏற்கனவே
உன்னைபோல் ஒருத்தியால் காதல் காயம்பட்டு
தனிமை சிறையின் தலைவாசலை
பார்த்து வந்தவர்களின் கதை
அறிந்தும் காதல் செய்தவன்
தனிமையும் எமக்கு இனிமைதானடி
சுயனலக்காரி


உன்னால் தானடி
உண்மை காதல் உடைகிறது - ஆனால்
என் காதல் உண்மையடி
என் உயிர் தந்து
நான் வாழ வைப்பேன் காதலை
காதல் அழிவதில்லை