Monday, March 30, 2009


விஜய டி.ராஜேந்தருக்கு ஆஸ்கார் விருது 2009- சிறந்த காமடியன் (அரசியல்)

இவருடன் போட்டி போட்டவர்கள்- சுப்ரமணியன் சுவாமி, விஜயகாந்த்

செய்தி:
-----------
தனித்தமிழ்
ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் வரும் மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைக்க உள்ளதாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

லட்சிய திமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தனித்தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் கட்சிகளுடன் லட்சிய திமுக கூட்டணி அமைக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆண்டிப்பண்டாரம்:
------------------------------
இவரை மாதிரி ஒருத்தர் இல்லேன்னா அரசியல் அவ்வளவு சுவாரஸியமாக இருக்காது போலிருக்கே! தனி ஈழத்தை ஆதரிக்கிற கட்சின்னா இவர் நெடுமாறன் கட்சியோடதான் கூட்டு வைக்கணும்.

Friday, March 27, 2009

நானும் அரசியல்வாதி


நான் தான் நல்லவன் என்று
பிகர்கலிடம் பிலிம் போடும் போது
எத்தனையோ வாக்கு உறுதிகள்
கொடுத்திருக்கேன்
காப்பாற்றியும் இருக்கேன் - எப்போ?
பிகரை செட் பண்ணும் போது

நானும் சென்று இருக்கேன் ஊர் ஊராக
பிரசர்ரம் பண்னவா - இல்லை
படம் பாக்க, அவளுடன் தான்

அலைந்தேன் கூட்டணி அமைக்க
என் வீட்டுக்கும் - அவள் வீட்டுக்கும்
அமையவில்லை கூட்டணி

தளர வில்லை, நின்றேன் தனியாக
வென்றேன் சுயேட்ச் சையாய்
கிடைத்தது கணவன் எனும் அமைச்சர் பதவி

வீடெனும் சட்ட சபையில் - சப்தமாக
விவாதிதித்து இருக்கேன்
குரலும் கொடுத்து இருக்கேன்
முல்லை பெரியார் ஆணையின் - நீர்
மட்டத்தைஉயர்த்து வது பற்றியா - இல்லை
சாம்பாரில் நீர் மட்டத்தை குறைப்பது பற்றி

ஒன்றும் சாதகமாக அமயவில்லை
ஒரு தனி மனிதனுக்கு (எனக்கே) நல்லது கூட
செய்ய முடிய வில்லை எனில் - தேவையா
இந்த அமைச்சர் பதவி, செய்து விட்டேன் ராஜினாமா

மாறிவிட்டேன், மாற்றிவிட்டேன்
கொடியையும், தூண்டையும்
இப்போ நான் ஒரு சாதாரண அரசியல்வாதி
அமைச்சர் பதவி காலியா இருந்தால் - தொடர்புக்கு

உயர்திரு உத்தமன்
அரை என்420, M.L.A விடுதி
சட்ட சபை பின்புறம்
சென்னை








Thursday, March 26, 2009

காதல்

"தெய்வீகக் காதல்ல தோல்வி வந்தா
துவண்டு போய் உக்காராதீங்க....
தெய்வத்தை மாத்திட்டு
காதலைக் CONTINUE
பண்ணுங்கப்பூ....
"

எங்கள் ஆசான் - பாடல்கள்



வரிகள் அருமை, ஆனால் என்ன விஜயகாந்த் க்கு எழுதுரோம்னு மறந்துட்டு எழுதி இருக்கார் போல, போய் சொல்லுறது தான் புலவர்காளோட பொழப்பு, இங்கே வரிகளில் நிருபித்தி இருக்கார்..

டான்ஸ் ஆட சொன்னால், சும்மா பந்தா பண்ணிட்டு போற பயலுக்கு இந்த வரிகள் கொஞ்சம் ஓவர் தான் பா.!

கண்டிப்பா, இசை அமைப்பாளரை பத்தி சொல்லியே ஆகணும், பெரிய திருட்டு பயலா இருப்பான் போல. ஒரு மெட்டு கூட சொந்தமா போட்டது மாதிரி தெரியல.

பாட்டை கேட்டு என் கண் கலங்கிருச்சு, கற்பனை பண்ணி பாத்தாலே நெஞ்சு வலி வருதே..! படத்துல பாத்தால்.. கொடுமை சார்..!

எழுதியதில் - பிடித்தது

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் நாட்டுக்கட்டைக்கு உண்டு

பொருள்:

பார்த்த உடனே மகிழ்ச்சியளிப்பதும் உள்ளத்தில் கிளர்ச்சியளிப்பதும் நாம் அடிக்கும் சரக்குக்குக்கூட கிடையாது. ஆனால் பார்க்கும் நாட்டுக்கட்டைக்கு உண்டு


(திருக்குறள், அதிகாரம் -129)


பிரிவது சுலபமா

பிரிவது சுலபமா? இருக்கலாம்
மனசாட்சியற்ற மூடர்களுக்கு..!
நானும் ஒரு மூடன் தான் அவ்வழியில்

பாசத்தை பணயமாக்கி
மனத்தை பிணமாக்கி
வாழும் ஒரு அயல்நாட்டு மூடன்

பணமே வாழ்க்கையா? வாழ்க்கையே பணமா?
தெரியவில்லை விடயம் - இன்னும் எனக்கு?

கற்றதோ கணிப்பொறி பொறியியல் - மரியதையாம்
அயல்நாட்டில் வேலை பார்த்தால் மட்டுமே
சும்மா இருந்த சங்கை ஊதி - கெடுத்தர்கள்
உறவினர்கள் எனும் மாமேதைகள்
என்னை இல்லை - எனது
பெற்றோர்களின் மனத்தை

வாழ்க்கையில் நமது பெரிய கடன் - பெற்றோர்களின்
ஆசையை முடிந்த அளவு நிறைவு செய்வது
நானும் முயன்றேன்
அடைந்தேன் லட்சியத்தை
செல்ல வேண்டிய நாள் வந்தது - அயல் நாட்டு பணிக்கு

எல்லாமே புதுசு
பேசும் பாசை உண்ணும் உணவு,
உடுக்கும் உடை - ஆண்களுக்கு அல்ல

கண்டேன் பல நமீதாக்களை நடு தெருவில்
கண்டேன் கலாசாரத்தை - கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் பயம்

முடியாது கொண்டாட உன் பொங்க லை
முடியாது கொண்டாட உன் தீபாவளி யை
முடியாது நினைத்தவுடன் தொடர்பு கொள்ள
முடியாது அழகிய தமிழில் பேச
இருக்காது பிடித்த உணவு
இருக்காது சண்டை போட - உன் நண்பர்கள்
இருக்காது பார்க்க பிடித்த திரைப்படம்

சொல்லவில்லை அந்த மாமேதைகள்
ஒரு வேளை சொல்லி இருந்தால்
என்ன வளம் இல்லை, இந்த திருநாட்டில் - ஏன்
கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்
என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பேன்

எழுதி நாளாகி விட்டது

எங்கிருந்தான் வள்ளுவன் எனும் இந்த கிறுக்கன்
இவ்வொரு காலம் - இருந்தான்
சில காலம் அவன் தாய் மடியில் - ஆம்
அவன் நாட்டில் நண்பர்களுடன்
இருந்தான் சிலகாலம் - சந்தோசமாக..!

வந்து விட்டான் இறைவன் அருளால் பத்திரமாக
எழுதுவான் அவன் அருளால் - சிவமயம்

எழுதுகிறேன் பைந் தமிழில் - என் முதல்
அயல்நாட்டு பயணத்தை பற்றி..!