Thursday, October 30, 2008

கலாம் ஒரு கனவு


உன்னை மகரஜோதி என்று மகிழ்ந்து நின்றோம்

நீயோ மின்மினிப் பூச்சியாக சென்றுவிட்டாய்

நவீன இந்தியாவை கட்டும் சிற்பி என வர்ணித்தோம்

உளியில்லாமல் பின்வாங்கி விட்டாய் நீ

வல்லரசாக்கப்போகிறேன் என்று, இருந்த ராஜ்ஜியத்தை தொலைத்ததேனோ!

எட்டாக்கனிக்கு ஆசைப்பட்ட குரங்குகளாய்

யானையைக் கற்பனை செய்த குருடராய்

தன் கால் உத்தரம் என்று நினைத்த கொக்குகளாய்

மதுவருந்தி மயங்கிப்போன வண்டுக்ளாய்

திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் நாங்கள்

விட்டுச்சென்ற தாயாய் நீ

கனவு காணச்சொன்ன கலாமே கனவாகிப் போனதென்ன!

No comments: